தென் மாவட்ட மக்கள் வெள்ள பாதிப்பிலிருந்து தாங்களாக மீண்டெழுவார்கள்" : ஆளுநர் தமிழிசை

0 742

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள் அரசு உதவியின்றி தாமாக மீண்டெழுந்ததைப் போலவே தென் மாவட்ட மக்களும் மீண்டெழுவார்கள் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை நீரை சேமித்து வருங்காலத்தில் விவசாயத்துக்கு பயன்படுத்துவதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து ஏரல் மற்றும் பொன்னங்குறிச்சிப் பகுதிகளில் வெள்ளம் பாதித்த இடங்களை அவர் பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட ஆளுநர் தமிழிசை, இதை அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வேண்டிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments